Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சியில் தீர்ந்து போன பிசிஆர் கருவிகள்! உடனே இறக்குமதி செய்த தமிழகம்!

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (08:40 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளுக்கான பரிசோதனைகளுக்காக 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் இன்று தமிழகம் வந்தடைந்தன.

தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள பிசிஆர் சோதனையே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இடையே சீனாவிடமிருந்து ரேபிட் கிட்கள் வாங்கப்பட்டன, ஆனால் அவை கொரோனாவை உறுதிபடுத்துவதில் தவறான முடிவுகளை காட்டியதை தொடர்ந்து அவை திரும்ப சீனாவுக்கே அனுப்பப்பட்டன. அதை தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவுறுத்தலின்படி பிசிஆர் சோதனையையே தமிழக அரசு முழுமையாக மேற்கொண்டு வருகிறது.

கொரோனா சோதனைக்கான பிசிஆர் கருவிகள் தென்கொரிய நிறுவனத்திடம் வாங்கப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பிசிஆர் கருவிகள் தீர்ந்துவிட்டதால் கொரோனா பரிசோதனையில் தேக்கம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இன்று 1.5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளன. மே 17 அன்றே 1 லட்சம் பிசிஆர் கருவிகள் முன்னதாக தமிழகம் வந்தடைந்தன. இவற்றை திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அளவிற்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments