Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரவுடியின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் குவிந்த பணம்.. வங்கி நிர்வாகம் போலீசில் புகார்..!

Mahendran
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (17:26 IST)
பெரியாங்குப்பத்தைச் சேர்ந்த ரவுடி அசோக் குமாருக்கு முத்தாண்டி குப்பம் கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ளது. அசோக் குமாரின் வங்கி கணக்கில், ஒரே மாதத்தில் அடுத்தடுத்து ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.50 லட்சம் என பணம் குவிந்ததால் சந்தேகம் அடைந்த வங்கி நிர்வாகம் போலீசில் புகார் செய்தது.
 
ஆனால் வங்கி நிர்வாகம் போலீசில் புகார் செய்த தகவல் தெரியவந்ததும், அசோக் குமார் தனது நண்பர்கள் 7 பேருக்கு ஆன்லைனில் பணத்தை பிரித்து அனுப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது அசோக் குமாரின் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் மட்டுமே இருந்ததால், போலீசார் அவரது வங்கி கணக்கை முடக்கியுள்ளனர்.
 
மேலும் அசோக் குமார் தலைமறைவாக உள்ள நிலையில், அவர் பணம் அனுப்பிய 7 பேரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ரவுடி அசோக் குமார் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் பணத்தை அனுப்பியவர்கள் யார்? எதற்காக அனுப்பினார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments