Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிக்கு கார் ஓட்ட பழகியபோது விபத்து! பரிதாபமாக பலியான சிறுமி

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (15:20 IST)
சென்னையில் கணவர் ஒருவர் தனது மனைவிக்கு கார் ஓட்ட பழகி கொடுத்த கொண்டிருந்தபோது அந்த கார் எதிர்பாராதவிதத்தில் சிறுமி மீது மோதியதால் அந்த சிறுமி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த டெனி என்பவர் தனது மனைவி ப்ரித்திக்கு கார் ஓட்ட கற்று கொடுத்து கொடுத்து கொண்டிருந்தார். அப்போது ப்ரித்தி திடீரென சாலையில் விளையாடி கொண்டிருந்த சிறுமி பவித்ராவின் மீது மோதினார்.

இதில் பலத்த காயமடைந்த பவித்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை தொடங்கும் முன்பே மரணம் அடைந்தார். இந்த நிலையில் பவித்ரா மீது காரை ஏற்றிய டெனி, ப்ரித்தி தம்பதியை அந்த பகுதி மக்கள் பிடித்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர்.   ப்ரித்தி கார் ஓட்ட பயின்று கொண்டிருந்தபோது திடீரென பதட்டத்தில் ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் சிறுமி மீது மோதியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்கிறார்: எஸ்வி சேகர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை.. ஒரே நாளில் அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்..!

அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர பனிச்சரிவு.. ஐந்து பேர் மாயம்.. அதிர்ச்சி தகவல்..!

பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: நடிகை தமன்னா எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments