Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்களுக்காக நாளை 60% பேருந்துகள் இயக்கம்! – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (14:34 IST)
நாடு முழுவதும் இன்றும், நாளையும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் நிலையில் நாளை 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசை கண்டித்து இன்று தேசிய அளவில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகத்திலும் 11 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து குறைந்துள்ளதால் மக்கள் பயணம் செய்ய முடியாமல் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 32 சதவீதம் பேருந்துகளே இயங்கி வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை பொதுமக்கள் நலன் கருதி 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், நாளைய போராட்டத்தில் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள், மற்ற சாதாரண ஊழியர்கள் வழக்கம்போல பணிக்கு திரும்புவார்கள் என போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments