பொதுமக்களுக்காக நாளை 60% பேருந்துகள் இயக்கம்! – தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (14:34 IST)
நாடு முழுவதும் இன்றும், நாளையும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் நிலையில் நாளை 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மத்திய அரசை கண்டித்து இன்று தேசிய அளவில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகத்திலும் 11 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து குறைந்துள்ளதால் மக்கள் பயணம் செய்ய முடியாமல் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 32 சதவீதம் பேருந்துகளே இயங்கி வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை பொதுமக்கள் நலன் கருதி 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், நாளைய போராட்டத்தில் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள், மற்ற சாதாரண ஊழியர்கள் வழக்கம்போல பணிக்கு திரும்புவார்கள் என போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியாருக்கு தொடர்பு! வழக்குத் தொடரப் போகிறேன்! - செங்கோட்டையனால் பரபரப்பு!

எடப்பாடியை முதல்வராக்கியவன் நான்! கட்சியை ஒருங்கிணைக்கதான் முயன்றேன்! - செங்கோட்டையன் வேதனை!

டெல்லிக்கு பாண்டவகளால் நிறுவப்பட்ட பெயரை வைக்க வேண்டும்.. அமித்ஷாவுக்கு பாஜக எம்பி கடிதம்..!

தொடர்ந்து ஒரே லிமிட்டில் ஏறி இறங்கும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

தேர்தலுக்கு முன்போ, பின்போ யாருடனும் கூட்டணி இல்லை.. பிரசாந்த் கிஷோர் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments