Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கு பாலமாக இருப்பேன்! – எல்.முருகன்!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (11:52 IST)
மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய – மாநில அரசுகளுக்கு பாலமாக செயல்படுவேன் என கூறியுள்ளார்.

மத்திய அரசு நிர்வாக வசதிக்காக அமைச்சரவை விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி மத்திய அமைச்சகத்தில் புதிய துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு 3 துறைகளில் மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன் “அடுத்த தமிழக பாஜக தலைவர் யார் என்பதை தலைமை முடிவு செய்யும். 2014ல் பிரதமர் மோடி பதவியேற்றது முதலாக தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது. மீனவர்கள் நலன் காப்பதில் மத்திய அரசு எந்த சமரசமும் இன்றி செயல்படும். தமிழகத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். மத்திய – மாநில அரசுகளிடையே பாலமாக செயல்படுவேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் திடீர் தீ.. விண்ணை முட்டும் புகை! பக்தர்கள் நிலை என்ன?

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள்.. மத்திய அரசு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவின் செலவு ரூ.1,731 கோடி..முகேஷ் அம்பானி பங்கேற்பு..!

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments