மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கு பாலமாக இருப்பேன்! – எல்.முருகன்!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (11:52 IST)
மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய – மாநில அரசுகளுக்கு பாலமாக செயல்படுவேன் என கூறியுள்ளார்.

மத்திய அரசு நிர்வாக வசதிக்காக அமைச்சரவை விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி மத்திய அமைச்சகத்தில் புதிய துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு 3 துறைகளில் மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன் “அடுத்த தமிழக பாஜக தலைவர் யார் என்பதை தலைமை முடிவு செய்யும். 2014ல் பிரதமர் மோடி பதவியேற்றது முதலாக தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது. மீனவர்கள் நலன் காப்பதில் மத்திய அரசு எந்த சமரசமும் இன்றி செயல்படும். தமிழகத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். மத்திய – மாநில அரசுகளிடையே பாலமாக செயல்படுவேன்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments