Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது: எல் முருகன்

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (13:29 IST)
கடவுள் இல்லை என்று சொன்னால் இனி மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்பது ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டது என பாஜக தமிழக தலைவர் வேல்முருகன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்து வரும் திமுக கடந்த சில வாரங்களாக கடவுள் குறித்து பாசிட்டிவான கருத்துக்களை தெரிவித்து வருகிறது. குறிப்பாக ஆன்மீகம் விவேகானந்தர் போன்ற வார்த்தைகளெல்லாம் திமுக தலைவர் முக ஸ்டாலின் வாயிலிருந்து வந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதால் ஆன்மீகம் விவேகானந்தர் என்றெல்லாம் பேசுகிறார். கடவுள் இல்லை என்று இனியும் சொன்னால் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது என்று கூறியுள்ளார் 
 
எல் முருகனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் முருகனின் இந்த கருத்துக்கு விரைவில் திமுக தரப்பில் இருந்து பதிலடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொது இடங்களில் மாஸ்க் அவசியம்.. கேரள முதல்வர் அறிவுறுத்தல்.. தமிழகத்தின் நிலை என்ன?

மனைவியிடம் அடிவாங்கியதை வெளியே தெரியாமலிருக்க என்ன செய்ய வேண்டும்: பிரெஞ்ச் பிரதமருக்கு டிரம்ப் அறிவுரை..!

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா.. 2வது முறையாக திருப்பி அனுப்பிய கவர்னர்..!

ஈபிஎஸ் - எல்.கே. சுதீஷ் திடீர் சந்திப்பு.. கூட்டணியா? ராஜ்யசபா தொகுதி பேச்சுவார்த்தையா?

சசிதரூரின் ஒரே ஒரு நாள் பேச்சு: பாகிஸ்தான் ஆதரவை திரும்ப பெற்ற கொலம்பியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments