Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவங்க போராட்டத்துக்கு அனுமதி; எங்களுக்கு மட்டும் தடையா? – எல்.முருகன் ஆவேசம்!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (12:57 IST)
சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனுதர்ம சாஸ்திரத்தில் பெண்கள் குறித்து இழிவாய் சொல்லப்பட்டிருப்பதாக திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சைக்குள்ளான நிலையில், பெண்கள் குறித்து தவறாக பேசிய திருமா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவில் சமீபத்தில் இணைந்த குஷ்பூ கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் செய்ய பாஜக முயன்ற நிலையில் போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், போராட்டத்திற்கு சென்ற குஷ்பூவும் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “திமுகவினர் இடஒதுக்கீடு தொடர்பாக ஆளுனர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது யாரும் கைது செய்யப்படவில்லை. போராட்டமும் தடுக்கப்படவில்லை. ஆனால் பாஜகவின் அறவழி போராட்டத்திற்கு தடை விதித்தது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டாலும் பாஜக மகத்தான வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments