Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரம்பாவை நிம்மதியாக இருக்க விடுங்கள் : நடிகை குஷ்பு கோரிக்கை

ரம்பாவை நிம்மதியாக இருக்க விடுங்கள் : நடிகை குஷ்பு கோரிக்கை

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (17:43 IST)
நடிகை ரம்பா தனது கணவன் மற்றும் கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்றும் நடிகை குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
நடிகை ரம்பா தனது கணவரிடமிருந்து விவகாரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக நேற்று காலை செய்தி பரவியது. ஆனால், பிரிந்திருக்கும் தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரித்தான் அவர் மனு செய்தார் என்று நேற்று மாலை செய்தி வெளியானது.
 
ஆனால் தான் இரண்டையுமே செய்யவில்லை.. நான் குடும்பத்துடன் நலமாக இருக்கிறேன் என்று நடிகை ரம்பா கூறியதாக இன்று காலை செய்திகள் வெளியானது. இப்படி அவரை பற்றி வெளியான செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள குஷ்பு “ரம்பா தனது அழகான இரு பெண் குழந்தைகள் மற்றும் அன்பான கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார். எனவே அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள். அவர் மனது அமைதியடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம்: ஈரான் எச்சரிக்கை

ஈரானை தாக்கிவிட்டு வெற்றிகரமாக திரும்பியது அமெரிக்க படை: டிரம்ப் அதிர்ச்சி தகவல்..!

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

அடுத்த கட்டுரையில்
Show comments