Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிப்புக் கடிதம் கொடுத்த கௌசல்யா – மீண்டும் அரசு வேலை !

Webdunia
சனி, 8 ஜூன் 2019 (09:28 IST)
இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுவதாக அரசு வேலையில் இருந்து நீக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கௌசல்யா மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் அரசு வேலையில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர், கௌசல்யா தம்பதியினர் மீது கௌசல்யாவின் உறவினர்கள் கொடுரமாக தாக்குதல் நடத்தினர். இதில் சங்கர் படுகொலை செய்யப்பட்டார். கௌசல்யா சில வெட்டுக் காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். தமிழகம் முழுவதும் இந்த ஆணவப்படுகொலை பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.அதன் பின்னர் கௌசல்யாவுக்கு மத்திய அரசு பாதுகாப்புத் துறையின் கீழ் பணி வழங்கியது.

சங்கர் பெயரில் ஆவணக்காப்பகம் உருவாக்கி கௌசல்யா ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இவர் சமீபத்தில் சக்தி என்ற பறையிசைக் கலைஞரை மறுமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளிக்கையில், இந்தியாவையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். இதனால் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கௌசல்யா குன்னூர் வெலிங்டன் கண்டொன்மெண்ட் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு இப்போது கௌசல்யா மத்திய அரசிடம் மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்து விட்டு மீண்டும் அந்தப் பணியில் இணைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments