Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை விரட்ட சிக்கன் கறி விருந்து வைத்த இளைஞர்: பெரும் பரபரப்பு

Webdunia
வியாழன், 16 ஏப்ரல் 2020 (18:59 IST)
கொரோனாவை விரட்ட சிக்கன் கறி விருந்து வைத்த இளைஞர்
கொரோனா வைரசிடம் இருந்து மனித இனத்தை காப்பாற்றா உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் இரவு பகலாக பாடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு கறி விருந்தில் கொரோனாவை தமிழகத்தில் இருந்து விரட்டி விடலாம் என்று இளைஞர் ஒருவர் முயற்சித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
 
கும்பகோணம் அருகே தியாக சமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு என்ற இளைஞர் அந்த பகுதியில் உள்ள இளைஞர்களை அழைத்து வயல்வெளி ஒன்றில் இலைகளை போட்டு சிக்கன் குழம்புடன் கூடிய விருந்து வைத்துள்ளார். கொரோனா விருந்து என்ற பெயரில் இந்த விருந்தை நடத்தினால் கொரோனா தமிழகத்தை விட்டு ஓடிவிடும் என்று அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த விருந்து கொடுத்த வீடியோ நேரடியாக பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்பானது. இதனை அடுத்து போலீசார் சுதாரித்து உடனடியாக அந்த விருந்து வைத்த சிவகுரு என்பவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் விருந்தில் சாப்பிட்ட இளைஞர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments