Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சையை தொடர்ந்து கும்பகோணம் பள்ளியிலும் கொரோனா! – அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (11:15 IST)
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை பள்ளியில் கொரோனா உறுதியான நிலையில் தற்போது கும்பகோணம் பள்ளி மாணவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தற்சமயம் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. முன்னதாக அம்மாப்பேட்டை அரசு பெண்கள் பள்ளியில் 56 மாணவிகள், 1 ஆசிரியர், 9 பெற்றோர்களுக்கு கொரோனா உறுதியானது. அதை தொடர்ந்து ஆலங்குடி, மதுக்கூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் கொரோனா உறுதியாகியுள்ளது.தஞ்சாவூர் அரசு உதவி பெரும் பள்ளி ஒன்றில் 2 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தொடர்ந்து தஞ்சாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments