Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்கு! – அறிவிப்பால் மீனவர்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (11:03 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில் கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்குப்பதியப்படும் என அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக மாறி தென் தமிழக நோக்கி நகர்ந்து வருகிறது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல் நாளை பாம்பன் – கன்னியாக்குமரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென் தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் குமரியில் கடலுக்குள் சென்ற மீனவர்களை திரும்ப வரவும் உத்தரவிடப்பட்டது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக 1000க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குள் சென்றிருந்த நிலையில் 700க்கும் அதிகமான மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் குளச்சல் பகுதியில் புயல் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும், கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறுதலாக அப்படி அறிவிக்கப்பட்டதா என்ற குழப்பம் நிலவியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments