Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (18:05 IST)
கரூரில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 
அகில இந்திய சிலம்பம் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
 
இதில், 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கரூர் தாந்தோணி ஒன்றியம், கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளி 4ம் வகுப்பு மாணவி பூமிதா பங்கேற்று 2 தங்கப் பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றார். சாதனை படைத்த மாணவி பூமிதாவாவை பாராட்டி தாண்டோணி வட்டார கல்வி அலுவலர் கவுரி நேற்று பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன், ஆசிரியர்கள், மாணவர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments