Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்க கடனை அடுத்த ஆட்சி தலையில் ஏற்றுவதா? – கே.எஸ்.அழகிரி ஆவேசம்!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (16:56 IST)
தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் முடிந்த நிலையில் அடுத்த ஆட்சிக்கு கடன் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக 2021-22ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஊரக வளர்ச்சி, கிராமப்புற வீட்டு வசதி, மருத்துவம், கல்வி என பல துறைகளுக்குமாக நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி “தமிழக விவசாயிகளின் பயிர்க் கடன் ரூபாய் 12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால், இடைக்கால பட்ஜெட்டில் ரூ 5 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மீதி ரூ 7,110 கோடியை அடுத்து தமிழகத்தில் அமையப் போகிற ஆட்சியின் மீது சுமத்துவதற்கு அ.தி.மு.க. அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments