காங்கிரஸ்ல சுதந்திரம் உண்டு.. ஆனா வரம்பு மீறினால்..!? – சாடையாக எச்சரிக்கும் கே.எஸ்.அழகிரி!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (09:23 IST)
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சிலர் ஆதரவாக பதிவிட்டதற்கு மறைமுக கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் காங்கிரஸ், திமுக கட்சிகள் அதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பூ புதிய கல்வி கொள்கையை வரவேற்பதாக கருத்து தெரிவித்திருந்தார். காங்கிரஸ் மொத்தமாக புதிய கல்வி கொள்கைக்கு எதிராக பேசி வரும் நிலையில், குஷ்பூ இதற்கு ஆதரவாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி “காங்கிரஸில் கருத்து சுதந்திரம் உண்டு. கட்சியின் அமைப்புக்குள் பேசினால் அதற்கு வரவேற்பு உண்டு. வெளியில் பேசினால் அதன் பெயர் முதிற்சியின்மை.” என்று கூறியுள்ளார். அவர் குஷ்பூவின் கருத்தை குறிப்பிட்டுதான் மறைமுகமாக அவ்வாறு கூறியுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments