Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதற்காக அதிமுகவிற்கு வாக்களிக்க கூடாது? அழகிரி பரபரப்பு பேட்டி!!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (20:00 IST)
அதிமுக என்ற பெயரில் பாஜக தான் 234 தொகுதியிலும் போட்டியிடுகிறது என கே.எஸ்.அழகிரி பரப்பரப்பு பேட்டி. 

 
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை வேளச்சேரியில் இருந்து நான் பிரச்சாரத்தை தொடங்குகிறேன். தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளேன். வருகிற ஏப்ரல் 3-ம் தேதி மதுரையில் பிரச்சாரம் முடிவடைகிறது.
 
இந்த பிரச்சாரத்தில், முதல்வர் அசோக் கெலாட், மல்லிகா அர்ஜீன் கார்கே, கர்நாடக முன்னாள் தலைவர் சித்தராமையா மற்றும் அவரது தோழர்கள், தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த தேர்தலில் முக்கியமான நோக்கம் தமிழகத்தை தமிழகம் ஆள வேண்டுமா டெல்லி ஆள வேண்டுமா என்பது தான். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்தால் திமுக தலைமையில் ஆட்சி அமையும் மு.க.ஸ்டாலின் முதல்வராவார். 
 
எதற்காக அதிமுகவிற்கு மக்கள் வாக்களிக்க கூடாது என்றால், தமிழகத்தின் உரிமையை அதிமுக அரசால் பாதுகாக்க முடியவில்லை. இயற்கை சிற்றம் வரும் போது மத்திய அரசிடம் இருந்து போதிய நீதியை வாங்கவில்லை‌. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று மத்திய அரசு சொல்கிறது. பன்முக தன்மை கொண்ட இந்தியாவை பாஜக அதனை சிதைக்க நினைக்கிறது. அதிமுக என்ற பெயரில் 234 தொகுதியிலும் பாஜக தான் போட்டியிடுகிறது.
 
சமஸ்கிருதத்திற்கு 300 கோடியும், செம்மொழியான தமிழுக்கு மிக குறைவான தொகை ஒதுக்கியுள்ளது. விசாரணைக்கு அஞ்சி அதிமுக மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதில்லை. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். 
 
வங்கி ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக போராடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவை தெரிவித்து கொள்கிறது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது வருவார்கள் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவது ஏன்? எப்படி நடக்கும்? ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments