Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லொக்கு லொக்குனு இரும்பியே பீதிய கிளப்புரானுங்க... அழகிரி அப்செட்!!

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (14:39 IST)
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து மத்திய அரசை சாடியுள்ளார்.
 
கொரோனா வைரஸ் குறித்து பலவேறு தனியார் தொண்டு நிறுவங்கள் விழிப்புணர்வு செய்து வந்ததையடுத்து மத்திய அரசு தொலைபேசி காலர்டியூன் வழியாக விழிப்புணர்வு செய்து வருகிறது. 
 
ஒருவருக்கு போன் செய்ததும் ரிங் போவதற்கு முன்பாக இருமல் சத்தம் கேட்கும் அந்த குரல் பின்னர் கோரோனா வைரஸ் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என அறிவுரை வழங்குகிறது. இந்த விழிப்புணர்வு நல்லதான் என்றாலும் அந்த இருமல் சத்தம் கேலிக்கு உள்ளாகியுள்ளது. 
இந்நிலையில்,  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கொரோனா குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா உயிர்க்கொல்லி நோய் மிகத் தீவிரமாக பரவி வருவதை ஆளும் மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவேண்டும். 
 
மத்திய சுகாதார அமைச்சகமோ, இந்திய மக்களுக்கு கைப்பேசி வாயிலாக, ஒவ்வொரு அழைப்பிலும் லொக், லொக்.... என்ற இருமல் குரலோடு ஆங்கிலத்தில் செய்தியைப் பரப்பி, இந்த பீதியை சாமான்ய மக்களிடம் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. 
 
இதை தவிர, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ அல்லது நேர்மறையான செய்திகளையோ மக்களிடத்திலே பரப்புரை செய்ய ஆளும் அரசுகள் முற்றிலும் தவறியுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments