Webdunia - Bharat's app for daily news and videos

Install App

84 ஆண்டுகளுக்கு பிறகு முன்கூட்டியே திறக்கப்படும் KRS அணை! காவிரியில் வெள்ளப்பெருக்கு!

Prasanth K
புதன், 25 ஜூன் 2025 (09:48 IST)

தமிழகத்தின் முக்கிய நதிகளில் ஒன்றான காவிரியில் கேஆர்எஸ் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட இருப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தின் டெல்டா பகுதிகள் காவிரி ஆற்றின் தண்ணீரை நம்பியே உள்ளன. காவிரி ஆறின் தண்ணீரோ கர்நாடக அணைகளை நம்பி உள்ளது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடகாவில் பெய்யும் கனமழையால் நீர்வரத்து அதிகரிக்கும். கேஆர்எஸ் அணையில் நீர் வரத்து அதிகரிக்கும்போது காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும்.

 

பொதுவாக இந்த அணை ஆகஸ்டு மற்றும் அதற்கு பிந்தைய மாதங்களில்தான் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டில் பருவமழை முன்னதாகவே தொடங்கிவிட்ட நிலையில் அணையில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் 84 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக கேஆர்எஸ்ஆர் அணையில் இருந்து ஜூன் மாதமே தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.

 

வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து இருக்கும் என்பதால் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,815 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருகரை காட்டி பெரியாரை கேவலப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது! - ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்!

கேர்ள் பிரண்டை நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சித்த இளைஞர்.. இளம்பெண் செய்த புத்திசாலித்தனமான செயல்..!

விராத் கோலி - ஜெனிலியா சர்ச்சைக்குரிய விளம்பரம்: குவியும் கண்டனங்கள்.. மீண்டும் வைரலானது ஏன்?

அதிமுகவுக்கு நிர்வாகிகளே இல்லை.. ஈபிஎஸ் இடம் விஜயபாஸ்கர் கடும் வாக்குவாதம்.. பெரும் பரபரப்பு..!

மனைவி, இரு மகள்கள் மீது கோபம்.. 3 கோடி ரூபாய் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்த நபர்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments