Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள் மகள் எவ்வளவு மதிப்பெண்?: கிருஷ்ணசாமியை ஓட்டம் பிடிக்க வைத்த பத்திரிகையாளர்கள்!

உங்கள் மகள் எவ்வளவு மதிப்பெண்?: கிருஷ்ணசாமியை ஓட்டம் பிடிக்க வைத்த பத்திரிகையாளர்கள்!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (16:47 IST)
அனிதா மரணம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.


 
 
அந்த மனுவில் அனிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணசாமிக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த பேட்டியின் போது கிருஷ்ணசாமி அனிதா அரியலூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றரை லட்சம் கட்டணம் கட்டி படித்துள்ளார் என ஒரு தகவலை கூறினார்.
 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செய்தியாளர்கள் அதற்கான ஆதாரம் இருக்கிறதா என கேள்வி எழுப்பினர். ஆனால் கிருஷ்ணசாமி தனது கருத்தில் இருந்து உடனடியாக பின்வாங்கினார். அது தகவல், நீங்கள் சொன்னால் நான் அதனை மாற்றிக்கொள்கிறேன் என ஜகா வாங்கினார்.
 
அதன் பின்னர் கிருஷ்ணாசாமியை கேள்விகளால் பத்திரிகையாளர்கள் துளைத்தெடுத்தனர். ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் கிருஷ்ணசாமி திணறினார். இன்றைய செய்தி அனிதா எனவே அவரது மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும். மற்ற விஷயங்கள் குறித்து இப்போது கேள்வி கேட்க வேண்டாம், பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என கூறினார். இதற்கு பத்திரிகையாளர்கள் நாங்கள் என்ன கேள்வி கேட்க வேண்டும் என நீங்கள் தீர்மானிக்கக் கூடாது என பதிலடி கொடுத்தனர்.
 
தொடர்ந்து கிருஷ்ணசாமி தனது மகளுக்கு மருத்துவ சீட்டை ஜெயலலிதாவின் சிபாரிசின் பேரில் வாங்கியது குறித்தும், அவரது மகளின் மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்தும் கேள்வி எழுப்பினர் பத்திரிகையாளர்கள். ஆனால் அதற்கு எல்லாம் பதில் அளிக்காமல் உடனடியாக அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments