Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும்: முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

Webdunia
சனி, 11 மார்ச் 2023 (11:03 IST)
இந்தியாவின் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 
 
கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வருகின்ற நிலையில் திடீரென அதிமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கேபி முனுசாமி மீண்டும் பாஜக தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் நரேந்திர மோடி தான் இந்தியாவின் ஆள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் புகழை உலகமெங்கும் பரப்பி வருகிறார் என்று கூறிய அவர் அதிமுக மற்றும் பாஜக இடையே சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு என்று கூறினார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments