Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிப் பண்டிகை : போக்குவரத்து நெரிசலில் கோயம்பேடு

தீபாவளிப் பண்டிகை : போக்குவரத்து நெரிசலில் கோயம்பேடு

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2016 (18:36 IST)
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து ஏராளமானோர் வெளியூருக்கு செல்வதால், கோயம்பேடு பேருந்து நிலையம், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.


 

 
தீபாவளியை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் 11,225 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் பலர் தங்கள் ஊருக்கு செல்வதற்கு, ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டார்கள். ஆனால் பலர் கடைசி நேரத்தில் பேருந்துகளை பிடிப்பதையே வாடிக்கையாக கொண்டிருப்பவர்கள்.
 
அவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாலும், ஏராளமான பேருந்துகள் வெளிவருவதாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. வடபழனி, மதுரவாயல், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
 
எனவே, பெரும்பாலானோர் தங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு 1 அல்லது 2 மணி நேரம் தாமதமாகத்தான் செல்கிறார்கள். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகத்தான், கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம்- சானடோரியம், பூந்தமல்லி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 
 
இருந்தாலும், அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படுகிறது. இது நாளை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments