Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடன் தள்ளுபடி செய்யல..! – கூட்டுறவு சங்கத்தை பூட்டிய மக்கள்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (09:49 IST)
கூட்டுறவு சங்கத்தில் பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என கூறி மக்கள் கூட்டுறவு சங்கத்தை பூட்டியது கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் மக்கள் பலரும் நகைக்கடன் பெற்றுள்ள நிலையில் 5 பவுனுக்குள் நகை கடன் பெற்றவர்கள் கடனை தள்ளுபடி செய்வதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கோவில்பட்டி அருகே வில்லிப்பட்டியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் 900க்கும் மேற்பட்டோர் நகைக்கடன் பெற்றுள்ள நிலையில் அவர்களில் 343 பேருடைய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையில் பெயர் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது.

இதனால் கடன் தள்ளுபடி கிடைக்காத மற்றவர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கூட்டுறவு சங்க கதவையும் மூடி பூட்டியுள்ளனர். பின்னர் அங்கு விரைந்த போலீசார் கூட்டுறவு சங்கத்தை மீண்டும் திறந்ததோடு மக்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு..! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.!!

அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டை கண்டித்து உண்ணாவிரதம்.. காவல்துறை அனுமதி..!

இதுதான் ஜனநாயகத்தின் அழகு. செல்வபெருந்தகைக்கு பாடம் எடுத்த அண்ணாமலை..!

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments