Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய கனமழை; விவசாய நிலங்கள் தேசம்!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (10:07 IST)
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 
 
இந்த நிலையில் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து இதன் காரணமாக பெரும்பாலான ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. மேலும் கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பலத்த சேதம் அடைந்து இருப்பதாகவும் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments