Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலை மறுத்த மாணவிக்கு கத்தி குத்து - வாலிபர் தப்பியோட்டம்

காதலை மறுத்த மாணவிக்கு கத்தி குத்து - வாலிபர் தப்பியோட்டம்
, செவ்வாய், 1 டிசம்பர் 2015 (09:44 IST)
காதலை ஏற்க மறுத்த மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை காவல் துறையினர் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
 

 
சேலம் மாவட்டம் காட்டுவளவை சேர்ந்த சேகர் மகள் சவுந்தர்யா (17). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரில் முதலாமாண்டு ஆங்கிலம் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தறித்தொழிலாளி சித்தேஸ்வரன் (25).
 
சித்தேஸ்வரன், சவுந்தர்யாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினமும் சவுந்தர்யாவிடம் தன்னை காதலிக்கும்படி சித்தேஸ்வரன் கூறியுள்ளார். அதற்கு சவுந்தர்யா மறுத்துள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த சித்தேஸ்வரன், நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்த சவுந்தர்யாவை கழுத்து, கை, தாடை, முகத்தில் சரமாரியாக குத்திவிட்டு, சித்தேஸ்வரன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
 
சவுந்தர்யாவின் அலறல் சத்தம்கேட்டு வந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருந்த சவுந்தர்யாவை மீட்டு, சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துகொண்ட காவல் துறையினர், சித்தேஸ்வரனை தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil