Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிருக்கு போராடிய பூனைக்குட்டியை தீயணைப்பு வீரர்கள்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (22:34 IST)
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே தனியார் திருமண மண்டபத்திற்குள் சிக்கி உயிருக்கு போராடிய பூனைக்குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.... 
 
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியில் உள்ள ஸ்ரீ வன்னியர் குல சத்ரிய திருமண மண்டபத்தின் மாடியில் பூனை குட்டி ஒன்று மாட்டிக்கொண்டு இறங்க வழியின்றி சத்தமிட்டு உள்ளது. இதனை அறிந்த அந்த வழியாக வந்த சிறுவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து திருமண மண்டபத்திற்கு வந்த தீயணைப்பு துறையில் வீரர்கள் மாடியில் சிக்கித்தவித்த பூனையை பத்திரமாக மீட்டு பூனை உரிமையாளரிடம் கொடுத்துச் சென்றனர். ஒரு பூனை குட்டி என்று பாராமல் அதன் உயிரை காப்பாற்றிய தீயணைப்புத்துறை வீரர்களை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்