Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிசான் மோசடிக்கு அதிமுக அரசே பொறுப்பு! – நைஸாக நழுவும் பாஜக!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (17:46 IST)
விவசாயிகள் பெயரில் நடைபெற்ற கிசான் நிதி மோசடிக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் என பாஜக கூறியுள்ளது.

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கிசான் நிதி வழங்குவதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்துள்ள முறைகேடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் முறைகேடு குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த முறைகேட்டில் அதிமுக மற்றும் பாஜக தொடர்பு இருப்பதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிசான் நிதி மோசடி குறித்து பேசியுள்ள தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி “விவசாயிகளுக்கான கிசான் நிதி திட்டம் மத்திய அரசுடையது என்றாலும், அதனை செயல்படுத்துவது மாநில அரசுகளே.. எனவே முறைகேடு நடந்ததற்கான பொறுப்பை மாநில அரசே ஏற்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments