Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கீழ்ப்பாக்கத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காவலர் உயிரிழப்பு!

கீழ்ப்பாக்கத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காவலர் உயிரிழப்பு!
, செவ்வாய், 5 டிசம்பர் 2023 (11:44 IST)
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில், நேற்று முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து கடுமையான வெள்ள சேதத்தை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 40 செமீ மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளன. பல இடங்களில் வெள்ள நீரில் கார்கள் மற்றும் பைக்குகள் இழுத்து செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில் வெள்ள பேரிடர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வீடு திரும்பிய காவலர் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். கீழ்ப்பாக்கம் மண்டபம் சாலை பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தலைமை காவலர் ருக்மேநாதன் உயிரிழந்துள்ளார். கொளத்தூர் K7 காவல் நிலையத்தில் பணியாற்றிய இவர் மீட்புப்பணிகள் முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது இந்த விபத்தில் சிக்கியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் செய்யாமல் கோரிக்கை இருந்தால் சொல்லவும்… விஷாலுக்கு மேயர் பிரியா பதில்!