Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு பலியான குஷ்பு உறவினர்: திரையுலகினர் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 31 மே 2020 (07:18 IST)
இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அம்மாநிலத்தில் பலி எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் அம்மாநிலத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் மும்பையில் உள்ள நடிகை குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக குஷ்பு தனது டுவிட்டரில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். குஷ்புவின் இந்த டுவீட்டுக்கு டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, பிக் பாஸ் போட்டியாளர் காஜல் பசுபதி உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர் மேலும் ரசிகர்களும் பலர் அவருக்கு ஆறுதல் கூறி உள்ளனர். குஷ்புவின் நெருங்கிய உறவினரே கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் மும்பை மாநகராட்சி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்து வருவதாகவும் இதன் காரணமாக வரும் நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments