Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேலோ-2024 தொடக்க விழா: கனவு நனவாகிய தருணம் இது!- அமைச்சர் உதயநிதி

Sinoj
வெள்ளி, 19 ஜனவரி 2024 (18:35 IST)
தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழா இன்று சென்னையில் நடந்து வருகிறது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். சென்னை வந்த பிரதமரை, ஆளுநர் ரவி, தமிழக அமைச்சர்கள்,  துரைமுருகன்,  சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை  பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

சென்னையில் தேசிய இளையோர் விளையாட்டு தொடர் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர்  உதயநிதி, கேலோ இந்தியா போட்டிகள் வரலாறு படைக்கும். செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகவும் குறைவான  நேரத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்து அரசு  நடத்தியது.

இதனைத்தொடர்ந்து, ஆசிய ஹாக்கி கோப்பை, ஸ்குவாஷ் உலகக் கோபை உள்ளிட்ட பல தொடர்களை வெற்றிகரமாகக நடத்தியுள்ளோம்.

6வது கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாடு நடத்துகிறது. கனவு நனவாகிய தருணம் இது. அனைத்துத்துறைகளிலும் இந்திய ஒன்றிய அரசுக்கே வழிகாடும் வகையில் தமிழ்நாடு  செயல்பட்டு வருகிறது ''என்று தெரிவித்துள்ளார்.

இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்  சென்னை,  கோவை,  மதுரை,  திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இன்று முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன்.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்.. மாமல்லபுரம் அருகே பரபரப்பு சம்பவம்..!

தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை..! படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்..! அனல் பறக்க பேசிய விஜய்.!

மூன்று குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சி!

மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு.

அடுத்த கட்டுரையில்
Show comments