Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழுகுன்றத்தில் விழுந்த மர்மபொருள்! கடற்படையை சேர்ந்ததா? – மக்களிடையே பரபரப்பு!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (11:33 IST)
திருகழுகுன்றத்தில் வானிலிருந்து விழுந்த பொருள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில அது கடற்படை தொடர்புடையது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் ஆடுகள் வளர்த்து வந்த நிலையில் வானிலிருந்து பிராகசமான வெளிச்சத்தோடு மர்ம பொருள் ஒன்று அப்பகுதியில் விழுவதை கண்டுள்ளார்.

இதுகுறித்து உடனடியாக அவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அப்பகுதிக்கு விரைந்த விஏஓ மற்றும் போலீஸார் 10 கிலோ எடை கொண்ட அந்த மர்ம பொருளை ஆய்வுக்கு உட்படுத்த எடுத்து சென்றுள்ளனர். எலெக்ட்ரிக் பட்டன்களுடன் கூடிய சிலிண்டர் வடிவ பொருளில் அபாய முத்திரையும் இடப்பட்டிருந்தது.

இதுத்தொடர்பாக அரக்கோணம் கடற்படைக்கு காவல்துறை அளித்த தகவலின் பேரில் கழுக்குன்றம் வந்த கடற்படை அதிகாரிகள் அது வெடிபொருள் அல்ல என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் அந்த பொருள் கடற்படை விமானத்தில் கொண்டு செல்லும்போது தவறி விழுந்ததா என விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு..!

ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி.. எதிர்க்கட்சியாக இருந்தால் ‘கோபேக் மோடி’.. திமுகவை வெளுக்கும் சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments