Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுந்து வா தலைவா’: விண்ணை பிளந்த தொண்டர்களின் கோஷங்கள்

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (20:00 IST)
சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் காவேரி மருத்துவமனையில் அறிக்கை வெளியானதால் திமுக தொண்டர்கள் மருத்துவமனையின் முன் கவலையுடன் குவிய தொடங்கிவிட்டனர்.
 
தலைவர் விரைவில் எழுந்து வர வேண்டும் என்ற வகையில் 'எழுந்து வா தலைவா’ என்ற கோஷத்தை அவர்கள் எழுப்பி வருகின்றனர். தொண்டர்களின் விண்ணை பிளக்கும் ஆக்ரோஷமான கோஷத்தால் காவேரி மருத்துவமனை இருக்கும் ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் காவேரி மருத்துவமனைக்கு சற்றுமுன் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, டி.ஆர்.பாலு ஆகியோர் வருகை தந்துள்ளனர். இன்னும் பல விஐபிக்கள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் ஆழ்வார்ப்பேட்டை பகுதி முழுவதிலும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments