Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுந்து வா தலைவா’: விண்ணை பிளந்த தொண்டர்களின் கோஷங்கள்

Webdunia
திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (20:00 IST)
சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் காவேரி மருத்துவமனையில் அறிக்கை வெளியானதால் திமுக தொண்டர்கள் மருத்துவமனையின் முன் கவலையுடன் குவிய தொடங்கிவிட்டனர்.
 
தலைவர் விரைவில் எழுந்து வர வேண்டும் என்ற வகையில் 'எழுந்து வா தலைவா’ என்ற கோஷத்தை அவர்கள் எழுப்பி வருகின்றனர். தொண்டர்களின் விண்ணை பிளக்கும் ஆக்ரோஷமான கோஷத்தால் காவேரி மருத்துவமனை இருக்கும் ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் காவேரி மருத்துவமனைக்கு சற்றுமுன் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, டி.ஆர்.பாலு ஆகியோர் வருகை தந்துள்ளனர். இன்னும் பல விஐபிக்கள் காவேரி மருத்துவமனைக்கு வருகை தரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் ஆழ்வார்ப்பேட்டை பகுதி முழுவதிலும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments