Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சத்தீவு தீர்மானம் ஒரு நாடகம்.. 4 வருடமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஈபிஎஸ்

Siva
புதன், 2 ஏப்ரல் 2025 (14:18 IST)
தமிழக சட்டமன்றத்தில் இன்று கச்சத்தீவு தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில், இது ஒரு நாடகம் என்றும், நான்கு வருடமாக தீர்மானம் இயற்றாமல், தேர்தல் நேரத்தில் மட்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
 
கச்சத்தீவு தீர்மானத்திற்காக நடத்தப்பட்ட விவாதத்தில் அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
 
இதனை அடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கவில்லை என்றும், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் மீனவர்கள் சோதனைக்கு உள்ளாகி உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
 
முந்தைய திமுக ஆட்சியின் காலத்திலேயே மத்தியில் ஐந்து பிரதமர் ஆண்டிருந்தபோதும் கச்சத்தீவு குறித்து எந்த தீர்மானமும் ஏற்கப்படவில்லை, அதனை அவர்கள் வலியுறுத்தவும் செய்யவில்லை. தற்போது, தேர்தலை மனதில் கொண்டு இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.
 
சட்டப்பேரவையில் இன்று இயற்றப்பட்ட கச்சத்தீவு தீர்மானம் ஒரு நாடகம். "நான்கு ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

8,200 மணி நேரம் பறந்த அனுபவமுள்ள கேப்டன்.. விமானிகளின் அதிர்ச்சி தகவல்கள்..!

பை பை இந்தியா.. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பிரிட்டிஷ் இளைஞரின் கடைசி வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments