Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வின்போது தந்தையை இழந்த மாணவர்களின் மீளாத சோகம்

Webdunia
புதன், 6 ஜூன் 2018 (09:02 IST)
நீட் தேர்வு நடந்த தினத்தில் தந்தையை இழந்த மாணவர் மற்றும் மாணவி தேர்வில் தோல்வி அடைந்திருபதால் அவர்களை சோகம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது
 
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் இந்த ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கேரளாவுக்கு தந்தையுடன் சென்று நீட் தேர்வு எழுதிய கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவரின் தந்தை அவர் தேர்வு எழுதி கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார். இவர் நீட் தேர்வில் 84 மதிப்பெண்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
 
அதேபோல் மதுரையில் தந்தையுடன் சென்று நீட் தேர்வை எழுதிய ஐஸ்வர்யா என்ற மாணவி தேர்வு எழுதி முடித்தவுடன் தந்தையிடம் தேர்வு கடினமாக இருந்ததாக கூறினார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவரது தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த நிலையில் மாணவி ஐஸ்வர்யா நீட் தேர்வில் 92 மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளதால் டாக்டர் படிப்பு படிக்கும் வாய்ப்பை இழந்தார்.
 
நீட் தேர்வு தினத்தன்று தந்தையை இழந்த மாணவர் மற்றும் மாணவி நீட் தேர்விலும் தோல்வி அடைந்ததால் அவரகள் மீளா சோகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வாகன சேவைகள்.. முழு விவரங்கள்..!

பிறந்து 48 மணி நேரம் ஆன குழந்தைகளை எலிகள் கடித்ததால் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையின் அவலம்..!

ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,100ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments