Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா வெள்ள நிவாரண நிதி ! அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஆசிரியர்களும் உதவி

Webdunia
புதன், 22 ஆகஸ்ட் 2018 (17:52 IST)
கேரளா வெள்ள நிவாரண நிதி ! கரூர் அருகே அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களும் சேர்த்து கொடுத்த நிவாரணபொருட்கள்


கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ள  பேருக்கு ஏற்பட்டு லட்ச கணக்கான மக்கள் தண்ணீர் உணவு இன்றி  இன்றும் அவதியுற்று வருகின்றனர் . சமூக நல  அமைப்புகள் தன்னார்வு  தொண்டு  நிறுவனங்கள் நிவாரண உதவிகளை தமிழகத்தில் இருந்து அனுப்பு வைத்து வருகின்றனர் . இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் பரமத்தி  ஒன்றியத்தில் உள்ள தொட்டியபட்டி  அரசு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி  சார்பில்   பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் பெற்றோர்கள் இணைந்து கேரளா வெள்ள  நிவாரண பொருட்களை திரட்டி அனுப்பிவைத்தனர் . இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை  ஆசிரியர் கோ.மூர்த்தி  கூறுகையில் : பள்ளி மாணவர்கள் மத்தியில் மனிதநேய பண்புகளை வளர்க்க கேரளா வெள்ள  நிவாரண நிதி  மற்றும்  நிவாரண பொருட்களை அனுப்ப  முடிவு செய்த்து இப்பகுதி பொதுமக்களிடம் நிதி திரட்டி பள்ளியின் சார்பாக  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் ஆனா சிறு உதவியை செய்கிறோம் . கேரளாவில்  படிக்கும் மாணவர்கள்  பாதிக்கப்பட்டு  உள்ளதாக செய்திகளை அறிந்து  இங்கு படிக்கும் சில  மாணவர்கள் அங்கு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுத்து உள்ளனர்  .இதனை கேரளா மக்கள் ஏற்று கொள்ளவேண்டும்  என்றும் அவர்  கூறினார்.

பேட்டி :  கோ.மூர்த்தி – பள்ளி தலைமை ஆசிரியர் – தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments