Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரனுக்கு 15 நாள் காவல்: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (17:56 IST)
கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட ’கறுப்பர் கூட்டம்’யூடியூப் சேனல் நிர்வாகிகள் செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே
 
’கறுப்பர் கூட்டம்’ சேனலின் செந்தில் வாசன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார் என்பதும் சுரேந்திரன் நேற்று புதுவை காவல் நிலையத்தில் சரண் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ’கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரன் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் 
 
’கறுப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சுரேந்திரன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து நீதிபதிகளின் உத்தரவுப்படி சுரேந்திரன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
 
கந்தசஷ்டிகவசம் அவதூறாக விமர்சனம் செய்து ’கறுப்பர் கூட்டம்’ குழுவினர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என முருக  பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments