Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா அணியை ஆதரிக்க ரூ.5 கோடி வாங்கினாரா கருணாஸ்? அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (22:33 IST)
நடிகர் கருணாஸ் தான் நடிக்கும் படங்களில் செய்யும் காமெடிகளைத்தான் தனது அமைப்பிலும் செய்து கொண்டிருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். திடீரென கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் யாருடைய ஆலோசனையும் இன்றி நீக்கினார். இது நடந்த ஒருசில நாட்களில் நிர்வாகிகள் கருணாஸை அமைப்பில் இருந்து நீக்கியுள்ளனர். என்னதான் நடக்குது முக்குலத்தோர் புலிப்படையில்...


 


இந்நிலையில் சசிகலா அணியை ஆதரிப்பதற்காக ரூ.5 கோடியை கருணாஸ் பெற்றதாக திடுக்கிடும் தகவல்களை வெளியிடுகின்றனர் முக்குலத்தோர் புலிப்படையின் நிர்வாகிகள்

இதுகுறித்து முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச்செயலாளராக இருந்த பாண்டித்துரை கூறியபோது, 'கூவத்தூர் பங்களாவில் கருணாஸ் இருந்தபோது புலிப்படையின் நிர்வாகிகளை அழைத்ததாகவும், சசிகலா தரப்பினர் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாகவும், அந்த பணத்தில் தன்னுடைய கடனை அடைத்துவிட்டதாகவும் கூறியதாக தெரிவித்தனர். ஆனால் கருணாஸ் உண்மையில் ஐந்து கோடி ரூபாய் பெற்றதாகவும், அதை மறைத்துவிட்டு தங்களிடம் ஒருகோடி தான் பெற்றதாக கருணாஸ் பொய் கூறியதாகவும் பாண்டித்துரை கூறுகிறார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments