தமிழக அரசுக்கு கருணாநிதி திடீர் கோரிக்கை
தமிழக அரசுக்கு கருணாநிதி திடீர் கோரிக்கை
மருத்துவப் படிப்புக்கான மாணவர்களின் விவகாரத்தில் தமிழக அரசுக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் மாணவ, மாணவியர் சேருவதற்கு நுழைவுத் தேர்வினை அனைத்து மாநிலங்களிலும் 2016ஆம் ஆண்டு முதல் நடத்தியே ஆக வேண்டுமென்று இந்திய உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான பிரச்சினையில் மத்திய அரசு சார்பில் மாறுபட்ட செய்திகளை வெளியிட்டு, அவர்களை மேலும் மேலும் குழப்பத்திலும், மனக் கவலையிலும் ஆழ்த்துவது நல்லதல்ல.
மத்திய சுகாதார அமைச்சர் அடுத்து ஏதோ புதிய தகவலை தெரிவிக்கப் போவதாகவும் செய்திகள் வருகின்றன. மத்திய அரசு தமிழக மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முக்கியமான இந்தப் பிரச்சினையைப் பொழுது போக்கும் விளையாட்டாக கருதாமல், தெளிவாகவும், உறுதியாகவும் தமிழக மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு இந்த ஆண்டில் மட்டுமல்லாமல் இனி எப்போதும் இல்லை என்ற நல்ல அறிவிப்பினை உடனே வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.