Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதி மன்னிப்பு கேட்கவேண்டும்: தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை

கருணாநிதி மன்னிப்பு கேட்கவேண்டும்: தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை

கருணாநிதி மன்னிப்பு கேட்கவேண்டும்: தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை
, செவ்வாய், 5 ஏப்ரல் 2016 (01:12 IST)
திமுக தலைவர் கருணாநிதி மன்னிப்பு கேட்கவேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

 
சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அக்கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் நாகராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேதுகையில், நபிகள் நாயகத்திற்கு அடுத்து கருணாநிதி தான் முஸ்லிம்களுக்கு இறைத்தூதர் என்று பேசியதாக கூறப்படுகிறது.
 
இது குறித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொதுச் செயலாளர் முஹம்மத் யூசுப் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்பேசிய அவர், நபிகள் நாயகத்துடன் கருணாநிதியை தொடர்புப்படுத்தி பேசியதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மேலும், இந்த சம்பவத்திற்கு, வரும் வியாழக்கிழமைக்குள் கருணாநிதி, இந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், திமுக தலைமை அலுவலகம் மற்றும் கோபாலபுரம் இல்லம் ஆகியவற்றை முற்றுகையிடுவோம் என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil