கருணாநிதி சிலை திறப்பு விழா! இதுவரை அறிவாலயம் வந்தவர்கள் யார் யார்?

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (16:46 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள சற்றுமுன் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்துவிட்டனர். சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்பி அவர்களை வரவேற்றார். சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பின் அறிவாலயம் வரவுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க கி.வீரமணி, வைகோ, ரஜினிகாந்த், திருமாவளவன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டி.ராஜா, முத்தரசன் ஆகியோர் வந்துவிட்டனர்.

சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் இசட் பிரிவு பாதுகாப்பில் இருப்பதால் இந்த விழா நடைபெறும் இடத்தில் 300 பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அண்ணா அறிவாலயம் முழுவதும் கடந்த சில மணி நேரமாக போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்க.. தலைமை நீதிபதி உத்தரவு..!

செல்வப்பெருந்தகை மாற்றமா? மாணிக் தாகூர் தமிழக காங்கிரஸ் தலைவரா? திமுக அதிர்ச்சி..!

வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.. உச்ச நீதிமன்றத்தில் வாதம்..!

வேளாங்கண்ணிக்கு ஹெலிகாப்டர் சேவை.. இந்த மாதம் முதல் தொடங்கும் என அறிவிப்பு..!

புதுச்சேரி என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும்.. ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் உருக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments