Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக விளக்கம் அளிக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக விளக்கம் அளிக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
, செவ்வாய், 26 மே 2015 (18:49 IST)
காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக வருகிற ஜூலை 28 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கர்நாடகாவுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
 

 
இது தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் சுதன் என்பவர் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில்,  காவிரியில் கழிவுநீர் கலப்பதாகவும், அதைத் தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
 
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட பசுமை தீர்ப்பாயம்,  காவிரியில் கழிவுநீர் கலப்பது குறித்து வருகிற ஜூலை 28 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி கர்நாடகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
இதேபோல தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil