Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது: கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ஆம் ஆத்மி கடிதம்

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (12:56 IST)
கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.க்கு சசிகலா உள்பட 3 பேரை தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது என்று  ஆம் ஆத்மி கட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 


 

 
காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சசிகலா உள்பட 3 பேரை தமிழக சிறைக்கு மாற்றக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
 
 
அந்த கடிதத்தில், தற்போதைய சூழ்நிலையில் சசிகலா உள்பட 3 பேரும் தங்களுக்கு பாதுகாப்பின்மை, அச்சுறுத்தல் போன்ற ஏதாவது ஒரு காரணத்தை கூறி, தங்களை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கூறி மனு அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு சசிகலா தரப்பில் மனு கொடுக்கும்பட்சத்தில் முதல் கட்டமாக  நீதிபதி சிறைத் துறை டி.ஜி.பி.யின் ஒப்புதலை கேட்கக்கூடும்.



 
 
அப்போது அவர்களை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கு பதிலாக அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளும், வசதிகளும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலேயே வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை டி.ஜி.பி. நீதிபதிகளிடம் கொடுக்க வேண்டும். மேலும் சசிகலா உள்பட 3 பேரும் தமிழக சிறைக்கு மாற்ற கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. அனுமதி வழங்கக் கூடாது என்று அக்கடிதத்தில் கூறியிருந்தனர்.
 
மேலும் இது தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments