Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தை ஏமாற்றும் கர்நாடகா

தமிழகத்தை ஏமாற்றும் கர்நாடகா
, வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (12:39 IST)
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் கர்நாடகா அரசு தமிழகத்துக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.


 

 
காவிரியில் இருந்து தமிழகத்துற்கு தண்ணீர் திறக்க விட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
 
கடந்த 6ஆம் தேதி நிலவரப்படி நான்கு அணைகளிலும் 56 டிஎம்சி தண்ணீர் இருப்பதாக கர்நாடகா நீர்வளத்துறை அறிவித்து இருந்தது. ஆனால் நேற்றைய நிலவரப்படி  நான்கு அணைகளிலும் 30 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதாகவும், கடந்த 9 நாட்களில் 26 டிஎம்சி தண்ணீர் காலியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
இதையடுத்து இன்னும் 10 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டிய நிலையில் கர்நாடகா அரசு தமிழகத்திற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜப்பான் நகர டைஜியில் நடத்தப்படும் கொடூர வேட்டை