புதுவையை அடுத்து கர்நாடக மாநிலத்திலும் விநாயக சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு அனுமதி!

Webdunia
ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (18:16 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி அனுமதி இல்லை என்றும் விநாயகர் சதுர்த்தியன்று பொதுவெளியில் விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது என்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைக்க கூடாது என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது
 
இந்த அறிவுறுத்தலை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தற்போது கர்நாடக மாநிலத்திலும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - வைகோ ஒன்றாக பேட்டி! தேவர் குருபூஜையில் நடந்த ஆச்சர்யம்!

மீண்டும் கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்.. நெரிசல் வழக்கில் தீவிர விசாரணை..!

தேசியத்தையும், தெய்வீகத்தையும் இணைத்த பெருமகனார்! - தேவர் குருபூஜை பிரதமர் பதிவு!

விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? தமிழிசை செளந்திரராஜன் பேட்டி..

இனிமேல் 6 வயது நிரம்பினால் தான் 1ஆம் வகுப்பில் சேர்க்க முடியும்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments