Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமராஜர் நினைவிடத்துக்கு ராகுல் & சோனியா காந்தி வந்ததே இல்லை – கராத்தே தியாகராஜன் பேச்சு!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (08:15 IST)
கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரமுகர் கராத்தே தியாகராஜன் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து சற்று முன் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார்.

ரஜினியின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், ரஜினி கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என அறிவித்ததால் தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

மேடையில் பேசிய அவர் ‘காங்கிரஸ் கட்சி இப்போது செயல்படுவதே இல்லை. அங்கே பேரம் பேசி தொகுதிகள் வாங்கப்படுகின்றன. காமராஜர் நினைவிடத்தில் இதுவரை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வந்து மரியாதை செலுத்தியதே இல்லை. அவ்வளவுதான் அவர்கள் காமராசருக்கு தரும் மரியாதை.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments