Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமராஜர் நினைவிடத்துக்கு ராகுல் & சோனியா காந்தி வந்ததே இல்லை – கராத்தே தியாகராஜன் பேச்சு!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (08:15 IST)
கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரமுகர் கராத்தே தியாகராஜன் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து சற்று முன் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார்.

ரஜினியின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், ரஜினி கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என அறிவித்ததால் தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

மேடையில் பேசிய அவர் ‘காங்கிரஸ் கட்சி இப்போது செயல்படுவதே இல்லை. அங்கே பேரம் பேசி தொகுதிகள் வாங்கப்படுகின்றன. காமராஜர் நினைவிடத்தில் இதுவரை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வந்து மரியாதை செலுத்தியதே இல்லை. அவ்வளவுதான் அவர்கள் காமராசருக்கு தரும் மரியாதை.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments