Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமராஜர் நினைவிடத்துக்கு ராகுல் & சோனியா காந்தி வந்ததே இல்லை – கராத்தே தியாகராஜன் பேச்சு!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (08:15 IST)
கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரமுகர் கராத்தே தியாகராஜன் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து சற்று முன் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார்.

ரஜினியின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன், ரஜினி கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என அறிவித்ததால் தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

மேடையில் பேசிய அவர் ‘காங்கிரஸ் கட்சி இப்போது செயல்படுவதே இல்லை. அங்கே பேரம் பேசி தொகுதிகள் வாங்கப்படுகின்றன. காமராஜர் நினைவிடத்தில் இதுவரை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வந்து மரியாதை செலுத்தியதே இல்லை. அவ்வளவுதான் அவர்கள் காமராசருக்கு தரும் மரியாதை.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

தங்கத்தின் விலையில் இன்று என்ன மாற்றம்? ஏற்றமா - இறக்கமா?

கட்டிப்புடி கட்டிப்புடிடா.. கண்ணாளா! காசு கொடுத்து கட்டிப்பிடிக்கும் பெண்கள்! - சீனாவில் புது ட்ரெண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments