Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரி - தாம்பரம் இடையே கோடைக்கால சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (18:20 IST)
பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கி விட்டதை அடுத்து சுற்றுலா செல்பவர்களுக்கு வசதியாக அவ்வப்போது தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் கன்னியாகுமாரி முதல் சென்னை தாம்பரம் வரையிலான கோடைகால சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மே ஒன்றாம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தாம்பரம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும் இந்த ரயில் கன்னியாகுமரியில் 7.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு ஆன்லைனில் தற்போது தொடங்கியுள்ளது என்றும் இந்த ரயிலை தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments