Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜக ஆட்சி.. கோவையில் கனிமொழி பிரசாரம்..!

Mahendran
வெள்ளி, 29 மார்ச் 2024 (12:51 IST)
திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டாலும் அவர் தமிழகம் முழுவதும் பரவலாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். நேற்று கரூர் தொகுதியில் ஜோதிமணிக்காக பிரச்சாரம் செய்த கனிமொழி இன்று கோவையில் பிரச்சாரம் செய்து வருகிறார், அவர் இந்த பிரச்சாரத்தில் கூறியதாவதுள்
 
பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. ஏழை விவசாயிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது. மக்களவைத் தேர்தலில் நிச்சயமாக பாஜக ஆட்சிக்கு வராது.
 
திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி சிக்கல்கள், குளறுபடிகள் தீர்க்கப்படும். அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜக ஆட்சி.  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நிலையை நாம்  உருவாக்க வேண்டும்’ என்று பேசினார்.
 
கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நிலையில் அவருடைய தொகுதியில் வந்து கனிமொழி எம்பி காரசாரமாக பிரச்சாரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments