Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனியாமூர் பள்ளி கலவரம்; கலவரக்காரர்கள் 300 பேர் கைது!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (08:56 IST)
கனியாமூர் பள்ளியில் மாணவி மர்ம மரணம் தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று போராட்டத்தில் கலவரம் வெடித்தது. பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனம் உள்ளிட்டவற்றை தீக்கிரையாக்கினர். பள்ளி அலுவலகத்தில் புகுந்து சூறையாடியதில் பல மாணவர்களின் சான்றிதழ்களும் அழிந்தன.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கலவரம் செய்ததாக 300 பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சக்தி மெட்ரிக் பள்ளியை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போலீஸார் பள்ளிக்குள் யாரையும் நுழைய அனுமதிக்காமல் காவலை அதிகப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மவுசு அதிகரிக்கும் பொறியியல் படிப்புகள்! புதிய பிரிவுகளில் ஆர்வம்! - 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்!

பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 3000 ஆபாச வீடியோ பறிமுதல்.. கார் டிரைவர் கைது..!

ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க தடை! ட்ரம்ப் உத்தரவு- அதிர்ச்சியில் மாணவர்கள்!

திருமலையில் நமாஸ் செய்த இஸ்லாமிய நபர்.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தவெக இன்னொரு பாஜகவின் ‘பி’ டீம்.. திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments