Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனியாமூர் பள்ளி கலவரம்; கலவரக்காரர்கள் 300 பேர் கைது!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (08:56 IST)
கனியாமூர் பள்ளியில் மாணவி மர்ம மரணம் தொடர்பாக கலவரத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று போராட்டத்தில் கலவரம் வெடித்தது. பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பள்ளி பேருந்துகள், போலீஸ் வாகனம் உள்ளிட்டவற்றை தீக்கிரையாக்கினர். பள்ளி அலுவலகத்தில் புகுந்து சூறையாடியதில் பல மாணவர்களின் சான்றிதழ்களும் அழிந்தன.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கலவரம் செய்ததாக 300 பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சக்தி மெட்ரிக் பள்ளியை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போலீஸார் பள்ளிக்குள் யாரையும் நுழைய அனுமதிக்காமல் காவலை அதிகப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments