Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால்.. மிரட்டல் வருகிறது: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (15:14 IST)
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் மிரட்டல் வருகிறது என திமுக எம்பி கனிமொழியை குற்றம் சாட்டி உள்ளார். 
 
தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் பாராளுமன்றம் என்பது கேள்வி கேட்க கூடாத பாராட்டு பத்திரங்களை மட்டுமே படிக்கக்கூடிய ஒரு இடமாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும் நாங்கள் கேள்விகளை முன் வைத்தால் கேள்வி கேட்க முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள் என்றும் ஒரு அமைச்சர் இடம் நீங்கள் மதுரை எய்ம்ஸ் பற்றி கேள்வி கேட்டால் நம்மை மிரட்டுகிறார் என்றும் தெரிவித்தார். 
 
கயிறு கழுத்தை நெரிக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு கேள்விக்கு பதில் சொல்லக்கூடிய அமைச்சர் இருக்கிறார் என்றால் இந்த நாட்டின் ஜனநாயகம் என்னவாக இருக்கிறது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அரசியல் கட்சிகள் பிரதமர் இடம் கேள்விகளை முன் வைக்கும் போது அவர் நமக்கு தரும் ஒரே பதில் எதிர்க்கட்சிகளை சாடுவது தான் என்றும் எந்த கேள்விக்கும் இதுவரை பதில் இல்லை என்றும் கனிமொழி எம்பி தெரிவித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments