Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால்.. மிரட்டல் வருகிறது: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (15:14 IST)
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டால் மிரட்டல் வருகிறது என திமுக எம்பி கனிமொழியை குற்றம் சாட்டி உள்ளார். 
 
தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் பாராளுமன்றம் என்பது கேள்வி கேட்க கூடாத பாராட்டு பத்திரங்களை மட்டுமே படிக்கக்கூடிய ஒரு இடமாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும் நாங்கள் கேள்விகளை முன் வைத்தால் கேள்வி கேட்க முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள் என்றும் ஒரு அமைச்சர் இடம் நீங்கள் மதுரை எய்ம்ஸ் பற்றி கேள்வி கேட்டால் நம்மை மிரட்டுகிறார் என்றும் தெரிவித்தார். 
 
கயிறு கழுத்தை நெரிக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு கேள்விக்கு பதில் சொல்லக்கூடிய அமைச்சர் இருக்கிறார் என்றால் இந்த நாட்டின் ஜனநாயகம் என்னவாக இருக்கிறது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அரசியல் கட்சிகள் பிரதமர் இடம் கேள்விகளை முன் வைக்கும் போது அவர் நமக்கு தரும் ஒரே பதில் எதிர்க்கட்சிகளை சாடுவது தான் என்றும் எந்த கேள்விக்கும் இதுவரை பதில் இல்லை என்றும் கனிமொழி எம்பி தெரிவித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

அடுத்த கட்டுரையில்
Show comments