Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழியா? துரைமுருகனா? பொருளாளர் பதவி யாருக்கு?

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (16:39 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளதோடு, கட்சியின் தலைவர் பதவியை யார் ஏற்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
 
ஸ்டாலின்தான் தலைவர் பதவியை ஏற்பார் என பேச்சு அடிபட்டாலும், திமுக தரப்பில் இது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்பட்டதாய் தெரியவில்லை. ஆகஸ்ட் 28 ஆம் தேதி, மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பொதுக்குழு செப்டம்பர் 1 ஆம் தேதி நடத்தப்படலாம் என்றுதான் கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ஸ்டாலின் மற்றும் அன்பழகன் இருவரும் மட்டும் ஆலோசனை நடத்தி அவசர அவசரமாக இந்த மாதம் 28 ஆம் தேதியே கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். 
 
பொதுக்குழுவில் திமுக தலைவராக தற்போதைய செயல் தலைவர் ஸ்டாலின் பொருப்பேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தலைவர் பதவிக்கு போட்டி ஏதுமில்லை என்றாலும்,  பொருளாளராக துரைமுருகனை நியமிப்பதா? அல்லது கனிமொழியை நியமிப்பதா? என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments