Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகிரியின் புது கட்சி? கனிமொழி கூறுவது என்ன??

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (11:58 IST)
இது ஜனநாயக நாடு, அதனால் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம் என அழகிரி குறித்து கனிமொழி பேச்சு. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவிலிருந்து விலகி பல காலமாக அரசியல் தொடர்பின்றி இருந்த மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அவரது ஆதரவாளர்களோடு அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில் பாஜகவோடு அவர் இணைய போவதாகவும் பேசிக்கொள்ளப்பட்டது. 
 
ஆனால் இந்த தகவல்களை மறுத்துள்ள மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கும் எண்ணம் தமக்கு இல்லை என கூறியுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, வரும் சட்டமன்ற தேர்தலில் எனது பங்கு இருக்கும் என தெரிவித்தார். மேலும், தனது அரசியல் நிலைப்பாட்டை ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்பதாகவும் புதிய கட்சி துவங்குவேனா என போக போக தெரியும் எனவும் கூறினார். 
 
இதனிடையே இது குறித்து கனிமொழி கூறியதாவது, தேர்தலில் அவர் எப்படி செயல்படுவது என்பது அவரது முடிவு. இதைப்பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. இது ஜனநாயக நாடு, அதனால் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். அதுபற்றி கருத்து கூற வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments